நான்கு பெரிய கவலைகள்
மக்கள் கவலைப்படும் விஷயங்கள் நான்கு உள்ளன – பணம், உறவுகள், கௌரவம் மற்றும் ஆரோக்கியம்! அவை யாவும் ஒரு நாள் போகத்தான் போகின்றன. இருப்பினும் நீங்கள் அவைகளை பற்றியே கவலைப்படுகிறீர்கள்.
வாழ்க்கையை ஒரு பரந்த பார்வையில் காணுங்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் எதையோ பற்றி கவலைப்பட்டீர்கள், ஆனாலும், இன்று நீங்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும், மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் நீங்கள் கவலைப்பட்டீர்கள். இந்தக் கவலைகளினால் உங்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. மாறாக, நீங்கள் உங்கள் உடலில் அதிக நச்சுகளை உருவாக்கினீர்கள். அவ்வளவே! வாழ்க்கை எப்படியும் சென்று கொண்டுதான் இருக்கிறது.
உங்களை தொந்தரவு செய்வது எது? விழித்தெழுந்து பாருங்கள், “எல்லாம் ஒரு நாள் முடிவுக்கு வரும். “எல்லாமே ஒருநாளில் முடிவடையும்” என்ற விழிப்புணர்வுதான் மனதின் இந்தத் தொடர்ந்து கவலைப்படும் இயல்பிலிருந்து உங்களை விடுவிக்க முடியும். “எல்லாமே மாறிக்கொண்டே இருக்கிறது, எல்லாம் மறைந்து கொண்டிருக்கிறது” என்று நீங்கள் உணரும்போது, மிகவும் திடமானவராகவும், வலுவானவராகவும், அதே சமயம் மிகவும் மென்மையானவராகவும், சமநிலையில் இருப்பவராகவும் மாறுகிறீர்கள்.
கவலைப்படுவது பயனற்றது; ஆனால், உங்களை தொந்தரவு செய்யும் விஷயத்தையோ அல்லது நீங்கள் விரும்பும் குறிக்கோளையோ அடைவதற்கான முயற்சியை மேற்கொள்வதுதான் பயனுள்ளதாகும். அதற்காக, உங்களுக்கு ஆற்றலும், செயலாற்றும் சக்தியும் தேவை. ஆன்மீகப் பயிற்சிகள் உங்கள் ஆற்றலை, உங்கள் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்.
கவலைகளின் காரணங்கள்
பணம் உங்களது கவலையின் காரணமா? பறவைகளைப் பாருங்கள், எல்லா விலங்குகளையும் பாருங்கள், அவை அனைத்தும் தங்களுக்கான உணவைப் பெறுகின்றன அல்லவா! இயற்கை எல்லாவற்றையும் தருகிறது. இயற்கை ஒரு பெரிய கொடை வள்ளல். எனவே, இயற்கை உங்களுக்கு தேவையானதை கொடுக்கும் என்று நம்புங்கள். உங்கள் பிரக்ஞை ஒரு நிலத்தைப் போன்றது, நீங்கள் அதில் என்ன விதைக்கிறீர்களோ, அதுவே முளைக்கும். நீங்கள் இல்லாமை என்ற விதையை விதைத்தால், இல்லாமையே முளைக்கும். ‘ஆம் மிகுதியாக இருக்கிறது’ என்று நீங்கள் சொன்னால், மிகுதியாகவே வருகிறது.
உறவுகள் உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன, நீங்கள் மிகவும் மனமுடைந்து போகிறீர்கள். விழித்துப் பாருங்கள். உறவுக்கு முன்பு, நீங்கள் உயிர்ப்புடனும், களிப்புடனும் இருந்தீர்கள், நீங்கள், சந்தோசமாக, சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருந்தீர்கள். நீங்கள் அந்த நபரைச் சந்தித்து உங்கள் உறவைத் தொடங்குவதற்கு முந்தைய நாட்களை நினைவில் கொள்ளுங்கள். அப்போது வாழ்க்கை நன்றாக இருந்தது. அதேபோல, உறவிற்குப் பிறகும் வாழ்க்கை நன்றாகவே இருக்கும். அப்படியிருக்க, இதற்காக ஏன் இவ்வளவு கவலைப்பட வேண்டும்?
எல்லாமே ஒருநாளில் முடிவடையும்” என்ற விழிப்புணர்வு, மனதின் இந்தக் கவலைப்படும் இயல்பிலிருந்து உங்களை விடுவிக்க முடியும்.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
உடல்நலம் பற்றி கவலைப்படுகிறீர்களா? உங்களை எவ்வளவு ஆரோக்கியமாக வைத்திருக்கப் போகிறீர்கள்? நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், ஒரு நாள் அது முடிவடையப் போகிறது, உடலுடனான உங்கள் தொடர்பு முடிவுக்கு வரப்போகிறது. அதற்காக, உடல்நலத்தை பராமரிக்கக்கூடாது என்று அர்த்தமல்ல, ஆனால் உட்கார்ந்து உங்கள் உடல்நலம் குறித்து கவலைப்படுவது அறிவீனம். வெறுமனே உட்கார்ந்து ஆராய்ந்து ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படுவது பயனற்றது. நீங்கள் எவ்வளவு கவலைப்படுகிறீர்களோ, அவ்வளவு உங்கள் உடல்நிலை இன்னும் மோசமாகிறது. இது உங்கள் உடலில் மன அழுத்த கார்டிசோல் ஹார்மோன்களை அதிகரிக்கிறது, இது குணப்படுத்துவதை தாமதப்படுத்துகிறது.
வேலை கிடைப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள். அந்தக் கவலை முகத்தில் பிரதிபலிக்கும். எந்த முதலாளியும், ஒரு ஜடம் போல, மறதியுடன் கூடிய சோகமாக தோற்றமளிக்கும் ஒருவரை வேலைக்கு அமர்த்துவாரா ? நீங்கள் வாணிபம் செய்பவராக இருந்தால், நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், கவலைப்படுவதன் மூலம், உங்கள் வணிகத்தை வெற்றிகரமாக நடத்த முடியுமா
நீங்கள் திருமணமாகாமல் இருந்து, ஒரு வாழ்க்கை துணையை தேடுபவராக இருந்து, கவலை தோய்ந்த முகத்துடன் தோற்றமளித்தால், யாராவது உங்களை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார்களா? மிகவும் மந்தமான மற்றும் சோகமாகத் தோற்றமளிக்கும் ஒரு நபரை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்களா? அல்லது மகிழ்ச்சியான, உற்சாகமான மற்றும், சந்தோஷமான ஒரு நபரை தேர்வு செய்வீர்களா? நினைவில் கொள்ளுங்கள், இந்த உலகில் 7 பில்லியன் மக்கள் உள்ளனர், அவர்களில் இரண்டரை பில்லியன் பேர் எதிர் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் திருமண வயதில் இருப்பவர்கள். ஒரு துணையை கண்டுபிடிப்பது பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?
கவலைகளை பற்றிய ஞானம்
வாழ்க்கையை ஒரு பெரிய பின்னணியில் பாருங்கள். நீங்கள் ஒரு மனநல மருத்துவமனையில் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். அங்குள்ள அனைத்து நோயாளிகளையும் கவனியுங்கள். அவர்களின் நிலைமைகளைப் பார்த்து, நீங்கள் அங்கு அனுமதிக்கப்படாததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். நீங்கள் ஒரு பார்வையாளர் மட்டுமே, தங்கியிருப்பவர்கள் அல்ல.
இது பலனளிக்கவில்லை என்றால், சுடுகாடு அல்லது இடுகாட்டுக்குச் செல்லுங்கள். ஒவ்வொரு நாளும் வந்து எரியும் எல்லா உடல்களையும் பாருங்கள். உங்களுக்கும் ஒருநாள் அந்த நிலை வரும். கவலைப்படுவதில் என்ன பயன்?
உங்கள் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருந்தாலும், நீங்கள் எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும் அல்லது எவ்வளவு பிரபலமானவராக, சக்திவாய்ந்தவராக இருந்தாலும், நீங்களும் மற்றவர்களும் ஒரு முறை தகனம் செய்யப்படுவீர்கள் அல்லது புதைக்கப்படுவீர்கள். அரை நாள் அங்கேயே உட்கார்ந்திருந்தாலே போதும். மக்கள் உடலுடன் வருவதையும், சிறிது அழுது, அதை தகனம் செய்துவிட்டு இரவு உணவை சாப்பிடச் செல்வதையும் நீங்கள் காண்பீர்கள். மறுநாள் காலை உணவு சாப்பிடுவார்கள். அவ்வளவே! என்றாவது ஒரு நாள் காட்சி முடியப்போகிறது, திரை விழப்போகிறது. கவலைப்படுவதில் என்ன பயன்? ஆனால் எப்படியும் ஒரு நாள் எல்லாம் முடிவடையும் என்பதால், அதைப் பார்த்து தற்கொலையை முடிவென்று நினைக்கவே கூடாது.
இயற்கை தன்னிச்சையாக தன்னுடைய பாதையை எடுத்துச் செல்லட்டும்.இயற்கையின் ஓட்டத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் . மற்றவர்களுக்கு பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம், அவர்களை துயரத்தில் ஆழ்த்த வேண்டாம்.
ஆன்மீக பயிற்சிகள் ஆற்றலைக் கொண்டு வருகின்றன, எனவே நீங்கள் செயல்பட முடியும். அவை உங்கள் இதயத்துடன், உங்கள் உணர்வுகளுடன் இணைக்க உதவுகின்றன, எனவே நீங்கள் தலையை கொடுத்து சிக்கிக்கொள்ளவில்லை.
– குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
தற்கொலை பயனற்றது, ஏனென்றால் நீங்கள் மீண்டும் அதே சுழற்சியை கடக்க வேண்டும். நீங்கள் திரும்பி வந்து முழு விஷயத்தையும் மீண்டும் ஒரு முறை அனுபவிக்க வேண்டும். இது ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை அறிந்து அனைத்தையும் இங்கேயே முடிக்கவும்.
கவலை செயல்முறை
நீங்கள் எதையாவது பெற விரும்பும் போது ஆசை உங்களுக்குள் எழுகிறது. ஆசைகளை பூர்த்தி செய்ய, உங்கள் ஆற்றல், உங்கள் இதயம் மற்றும் ஆன்மாவை ஈடுபடுத்த வேண்டும். ஆசைகளை நிறைவேற்ற உழைக்க முடியாத நேரத்தில், வெறுமனே அதைப்பற்றி சிந்திக்கும்போதுதான் கவலை ஏற்படுகிறது உங்களுடைய இச்சா சக்தி (ஆசையின் சக்தி) உங்கள் கிரியா சக்தியுடன் (செயல்படுவதற்கான ஆற்றல்) சமநிலையில் இருக்க வேண்டும்.
கவலைப்படுவது பயனற்றது; ஆனால், உங்களை தொந்தரவு செய்யும் விஷயத்தின் மீது அல்லது நீங்கள் விரும்பும் குறிக்கோளின் மீது முயற்சியை மேற்கொள்வதுதான் பயனுள்ளதாகும்.
ஆன்மீகம் ஒருவருக்கு வேலை செய்ய, செயல்பட வலிமையையும், ஆற்றலையும் தருகிறது. எனவே, நீங்கள் செயல்பட முடியும். அவை உங்கள் இதயத்துடன், உணர்வுகளுடன் இணைவதற்கு உதவுகின்றன, எனவே கவலையின் பிடியில் சிக்கிக்கொள்ள மாட்டீர்கள்.
தலை கவலைப் படுகிறது, நெஞ்சம் பதறுகிறது. இவ்விரண்டும் ஒரே நேரத்தில் செயல்பட முடியாது. உங்கள் உணர்வுகள் ஆதிக்கம் செலுத்தும்போது, கவலை கரைந்துவிடும்.
நீங்கள் அதிகமாக கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் உணர்வுகள் செயலிழந்து, கவலையின் பிடியில் சிக்கிக்கொள்கிறீர்கள். கவலைப்படுவது உங்கள் மனதையும் இதயத்தையும் செயலற்றதாகவும் மந்தமாகவும் ஆக்குகிறது. கவலைகள் தலையில் சுமக்கும் கனமான பாறை போன்றது. கவலை உங்களைச் சிக்கவைக்கிறது. அது உங்களை ஒரு கூண்டுக்குள் அடைக்கிறது. இதை நீங்கள் உணரும்போது, உங்கள் கவலை மறைகிறது.
உணர்வுகள் மலர்களைப் போன்றது, அவை அரும்பி, மலர்ந்து, உதிர்கின்றன. உணர்வுகள் எழுகின்றன, விழுகின்றன, பின்னர் மறைந்து விடுகின்றன. உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, நீங்கள் நிம்மதியாக உணர்கிறீர்கள். கோபமாக இருக்கும்போது, உங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறீர்கள், அடுத்தகணம் சரியாகிவிடுவீர்கள். அல்லது நீங்கள் வருத்தப்பட்டு அழுகிறீர்கள், அதிலிருந்து மீண்டு வருகிறீர்கள்.
உணர்வுகள் சிறிது நேரம் நீடிக்கும், பின்னர் அவை குறைகின்றன, ஆனால் கவலை உங்களை நீண்ட காலத்திற்கு வாட்டுகிறது. இறுதியில் உங்களையே விழுங்கிவிடுகிறது. உணர்வுகள் உங்களை இயல்பாக இருக்கச் செய்கின்றன. குழந்தைகள் உணர்வுகளை உணர்கிறார்கள், அதனால் அவர்கள் தன்னிச்சையாக இருப்பார்கள்.
பெரியவர்கள் தங்கள் உணர்வுகளுக்கு தடைபோடுகிறார்கள், அதன் விளைவாக அவர்கள் கவலைப்படத் தொடங்குகிறார்கள். எதையாவது பற்றிய கவலை செயல்பாட்டைத் தடுக்கும், அதே நேரத்தில் உணர்வுகள் செயல்பட தூண்டுகின்றன.





